மதுரை: தேனி மாவட்டம் பழனிசெட்டிப்பட்டி தொடக்க பால் கூட்டுறவு சங்கத்தின் தலைவரான அம்மாவாசை, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் தேனி ஆவினில் விதிமுறை மீறி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் சகோதரர் ஓ,ராஜா தலைவராகவும், துணைத்தலைவர் மற்றும் உறுப்பினர்களாக அதிமுகவினரும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதை ரத்து செய்ய வேண்டும் என கூறியிருந்தார். இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த நீதிமன்றம், தேனி ஆவின் தலைவராக ஓ.ராஜா மற்றும் தற்காலிக உறுப்பினர்கள் செயல்பட தடை விதித்தது. இந்தத் தடையை நீக்கக் கோரி, ஆவின் இயக்குநர், துணைப்பதிவாளர் மற்றும் தேனி ஆவின் பொதுமேலாளர் தரப்பில் ஐகோர்ட் கிளையில் மனு செய்யப்பட்டது.