திருவண்ணாமலை: கிராமங்களில் குடியிருப்பு உள்ள பகுதிகளில் பொதுமக்கள் குப்பைகளை திறந்த வெளியில் கொட்டுவதை தடுக்க ஊரக வளர்ச்சி துறை சார்பில் திடக்கழிவு மேலான்மை திட்டத்தின் கீழ் குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. இத்தகைய குப்பை தொட்டிகளில் பொதுமக்கள் குப்பை கொட்டுவதால் தூய்மை பணியாளர்கள் சிரமம் இன்றி குப்பைகளை அகற்றி வருகின்றனர்.இந்நிலையில், திருவண்ணாமலை அடுத்த தென்மாத்தூர் கிராமத்தில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் வழங்கப்பட்ட குப்பை தொட்டிகள், கிராமத்தில் வீதிகளில் வைக்கப்படாமல், கிராமத்திற்கு வெளியே உள்ள நிழல் கூடம் அருகே திருவண்ணாமலை- திருக்கோவிலூர் சாலை ஓரத்தில் 10 குப்பை தொட்டிகள் வரிசையாக வைக்கப்பட்டுள்ளது.