சித்தூர்: சித்தூர்- வேலூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் கழிவுநீர் கால்வாய் திறந்தநிலையில் உள்ளது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். சித்தூர் உழவர் சந்தை எதிரே அரசுக்கு சொந்தமான நூலக சாலை உள்ளது. இதன் அருகே ஆர்டிஓ அலுவலகம், திருமலை திருப்பதி தேவஸ்தான திருமண மண்டபம், எம்பிடிஓ அலுவலகம் உள்ளிட்ட அரசுக்கு சொந்தமான அலுவலகங்கள் இயங்கி வருகிறது. கடந்த ஆட்சிக்காலத்தில் சித்தூர்-வேலூர் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாக மாநகராட்சி அதிகாரிகள் சாலையின் இருபுறமும் உள்ள வீடுகளையும் அரசுக்கு சொந்தமான அலுவலக கட்டிடங்களையும் இடித்து தரைமட்டமாக்கினர்.
சித்தூர்-வேலூர் தேசிய நெடுஞ்சாலையோரத்தில் திறந்த நிலையில் கழிவுநீர் கால்வாய்: துர்நாற்றத்தால் பொதுமக்கள் அவதி
- திறந்த சாக்கடை கால்வாய்
- சித்தூர்-வேலூர் தேசிய நெடுஞ்சாலை கழிவுநீர் கால்வாய்
- சித்தூர்-வேலூர் தேசிய நெடுஞ்சாலை