அரூர்: அரூர் மேல் பாட்ஷா ேபட்டையில், சாலையின் நடுவே உள்ள குழியால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். அரூர் பேரூராட்சி 5வது வார்டுக்குட்பட்ட மேல்பாட்ஷாபேட்டையில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையின் நடுவே, சாக்கடைக் கழிவுகளை தூர் வாருவதற்கு வசதியாக குழிகள் வெட்டப்பட்டுள்ளது.