அரூர் மேல்பாட்ஷாபேட்டையில் சாலை நடுவே குழியால் விபத்து அபாயம்

அரூர்: அரூர் மேல் பாட்ஷா ேபட்டையில், சாலையின் நடுவே உள்ள குழியால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி வருகின்றனர். அரூர் பேரூராட்சி 5வது வார்டுக்குட்பட்ட மேல்பாட்ஷாபேட்டையில் சுமார் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கான்கிரீட் சாலையின் நடுவே, சாக்கடைக் கழிவுகளை தூர் வாருவதற்கு வசதியாக குழிகள் வெட்டப்பட்டுள்ளது.

 

இந்த குழியில் மேல் மூடிகள் இல்லாததால் திறந்த நிலையில் உள்ளது. இதனால், இவ்வழியாக வரும்ட வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். மேலும் இப்பகுதியில் சேர்ந்து குழந்தைகள் விளையாடும் ேபாது, குழியில் விழுந்து காயமடைகின்றனர். எனவே, இநத குழிகளுக்கு மேல் மூடிகளை அமைக்க, பேரூராட்சி நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: