சீர்காழி: சீர்காழி அருகே திருவெண்காட்டில் ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் தனக்கு சொந்தமான வயலில் கருப்புகவுனி, ஆத்தூர் கிச்சடி சம்பா போன்ற இயற்கை ரக நெல் சாகுபடி செய்துள்ளார். உடல் நலத்திற்கு ஆரோக்கியம் தரும் இந்த ரக அரிசியை அனைவரும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர்.
சீர்காழி அருகே திருவெண்காட்டில் வசிப்பவர் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ராஜகோபால் இவர் பல ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமாக மங்கைமடத்தில் உள்ள ஒரு ஏக்கர் நிலத்தில் பழமையான இயற்கை ரக நெல் வகையான உடலுக்கு எதிர்ப்பு சக்தியை தரக்கூடிய கருப்புகவுனி நெல் சாகுபடி செய்துள்ளார்.