பொங்கல் பண்டிகையை முன்னிட்டு டாஸ்மாக்கில் ஆய்வு

சென்னை: டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. இந்த கடைகளில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்வதை தடுக்க 20 நாட்களுக்கு ஒருமுறை அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழக்கம். இந்தநிலையில், வரும் 15ம் தேதி தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகைக்கு கூடுதல் விலை வைத்து  மதுவிற்பனை செய்வதை தடுக்கவும், பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் டாஸ்மாக் கடைகளில் அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

Related Stories: