பெரம்பூர்: போலீசாருக்கு ஒன்றரை வருடமாக டிமிக்கிக்கொடுத்து வந்த பிரபல ரவுடி சிக்கினான்.சென்னை வியாசர்பாடி, மகாகவி 16வது தெருவை சேர்ந்தவர் ரசூல்கான் (38). பிரபல ரவுடியான இவர் மீது கொடுங்கையூர் காவல் நிலையத்தில் அப்துல் கரீம் என்பவரை கடத்திய வழக்கு மற்றும் 2019ம் ஆண்டு போரூரில் ₹50 லட்சம் ஏமாற்றிய வழக்கு, 2018ல் பட்டினப்பாக்கத்தில் வழிப்பறி வழக்கு, 2014ல் திருவல்லிக்கேணியில் ₹25 லட்சம் கள்ளநோட்டு மாற்ற முயன்ற வழக்கு என பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரை போலீசார் தேடி வந்த நிலையில், கடந்த ஒன்றரை வருடமாக ரசூல்கான் தலைமறைவாக இருந்தார்.