வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன் தந்தை குயில்தாசனுடன் இருக்கவும், சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவும் கடந்த நவம்பர் 12ம் தேதி முதல் ஒரு மாத பரோல் வழங்கப்பட்டது. ஜோலார்பேட்டையில் உள்ள அவரது வீட்டில் தங்கி சகோதரி மகள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றதுடன், தந்தை குயில்தாசனுடன் மருத்துவமனைக்கு உடன் சென்றும் வந்தார்.