ஓசூர்: ஓசூர் அருகே வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் ராகி, நெல் அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில் 40க்கும் மேற்பட்ட யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் இருந்து ஓசூர் சானமாவு வனப்பகுதிக்கு வந்துள்ளதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியில் கடந்த மாதம் 60க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டிருந்தன. இந்த யானைகள் விவசாய பயிர்களை தின்றும் மிதித்தும் சேதப்படுத்த வந்ததால் யானைகளை விரட்ட கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் வனத்துறையினர் மற்றும் பொதுமக்கள் பலமுறை போராடி யானைகளை தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டியடித்தனர்.