தமிழகத்தில் மாவட்ட உள்ளாட்சி தலைவர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கு இன்று மறைமுக தேர்தல்

சென்னை: தமிழகத்தில் மாவட்ட உள்ளாட்சி தலைவர், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட 5 பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடைபெறுகிறது. தமிழத்தில் 2 கட்டமாக நடந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் ஜனவரி 6ல் பதவி ஏற்றனர். மறைமுக தேர்தலில் 27 மாவட்ட ஊராட்சி தலைவர், துணை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 314 ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர்களும் மறைமுக தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர்களும் மறைமுக தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். மாவட்ட தலைவர், ஒன்றிய தலைவர் பதவிக்கு காலை 11 மணிக்கு மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. மாவட்ட, ஒன்றிய, ஊராட்சி மன்ற துணை தலைவர் தேர்தல் பிற்பகல் 3.30 மணி அளவில் நடைபெற உள்ளது.

Related Stories: