சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம் அமைப்புகளின் கூட்டமைப்பினர் நேற்று முதல்வரை சந்தித்து மனு அளித்தனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேற்று காலை 11 மணிக்கு, சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் 23 இஸ்லாமிய கூட்டமைப்பின் தலைவர் ஷாஜா மொஹிதீன், ஒருங்கிணைப்பாளர்கள் பஷீர் அகமது, முகமது அன்சூர் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து தேசிய குடியுரிமை பதிவேடு (என்ஆர்சி) தொடர்பாகவும், தமிழகத்தில் மத்திய அரசு நிறைவேற்றிய குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை நிறைவேற்ற கூடாது என்றும் நேரில் வலியுறுத்தி மனு அளித்தனர்.