சென்னை: செங்குன்றம் அருகே பைக் மீது லாரி மோதியதில் கணவனுடன் பொங்கல் பரிசு வாங்க சென்ற பெண் உடல்நசுங்கி பலியானார்.
செங்குன்றம் அடுத்த ஆட்டந்தாங்கல் நகரை சேர்ந்தவர் விநாயகமூர்த்தி. இவரது மனைவி மகாலட்சுமி (45). தம்பதி இருவரும் கடந்த 3 ஆண்டுக்கு முன்பாக சென்னை வியாசர்பாடி, சர்மா நகரில் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்குவதற்காக நேற்று காலை 10 மணியளவில் இருவரும் செங்குன்றத்தில் இருந்து கொருக்குப்பேட்டைக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தனர். செங்குன்றம்-திருவள்ளூர் கூட்டு சாலை அருகே பைக் வந்தபோது பின்னால் வந்த லாரி பைக் மீது வேகமாக மோதியது.