சென்னை: தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: ஹஜ் 2020க்காக 6,028 (7 குழந்தைகள் உட்பட) விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் ஹஜ் பயணிகளிடம் இருந்து தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவால் பெறப்பட்டுள்ளன. எனவே, ஹஜ் 2020க்கான ஹஜ் பயணிகளை வருகிற 13ம் தேதி குலுக்கல் முறை (குறா) மூலம் தெரிவு செய்யுமாறு மும்பை, இந்திய ஹஜ் குழு, மாநில ஹஜ் குழுவை கேட்டுக் கொண்டுள்ளது. மும்பை, இந்திய ஹஜ் குழு கேட்டுக்கொண்டபடி, ஹஜ் 2020க்கான ஹஜ் பயணிகளை குலுக்கல் முறை மூலம் தெரிவு செய்ய தமிழ்நாடு மாநில ஹஜ் குழு முடிவு செய்துள்ளது. இந்த குலுக்கல் 13ம் தேதி (திங்கட்கிழமை) பகல் 11.30 மணியளவில் சென்னை, ராயப்பேட்டை, புதுக்கல்லூரியில் உள்ள, ஆனைக்கார் அப்துல் சுக்கூர் அரங்கத்தில் நடைபெறும்.