வட்டார கல்வி அலுவலர் பணி விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு

சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் காலியாக உள்ள வட்டார கல்வி அலுவலர் பணியிடங்களில் தகுதியான பட்டதாரிகளை நியமிப்பதற்கான அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27ம் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டது. தகுதியுள்ள நபர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஜனவரி 9ம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரிடம் இருந்து கால நீட்டிப்பு கேட்டு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு கோரிக்கைகள் வந்தது. அதன்பேரில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும் வாய்ப்பை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி 21ம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். இதையடுத்து, மேற்கண்ட வட்டார கல்வி அலுவலர்கள் தேர்வு பிப்ரவரி 15, 16ம் தேதிகளில் (உத்தேச தேதி) நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

Related Stories: