அம்பை: அம்பாசமுத்திரம் தாமிரபரணி நதிக்கரையில் அமைந்துள்ள அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை 2.30 மணிக்கு நடராஜ பெருமானுக்கு 36 வகையான சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு தீபாராதனைகளும் நடந்தது. காலை 5.30 மணிக்கு ஆருத்ரா தரிசனம், கோபூஜை, தாண்டவத் தீபாராதனயும் நடந்தது. அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணிக்கு திருமுறை பாராயணத்துடன் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் சுவாமி எழுந்தருளி நான்கு ரத வீதி மற்றும் நான்கு மாட வீதி வழியாக வீதியுலா நடந்தது. வீதியுலாவின் போது திரளான பக்தர்கள் வழிபாடு செய்தனர்.