காரியாபட்டி: காரியாபட்டியில் சாலையோரங்களில் குவிக்கப்படும் கோழிக்கழிவுகளால் துர்நாற்றம் வீசி, அந்த வழியாகச் செல்லும் வாகன ஓட்டிகளும், குடியிருப்புவாசிகளும் அவதிப்படுகின்றனர். காரியாபட்டியில் பத்துக்கும் மேற்பட்ட கோழிக்கறிக்கடைகள் உள்ளன. இந்த கடைகளில் தினசரி 1500 கிலோவுக்கு மேல் கோழிக்கறி விற்பனையாகிறது. திருவிழா காலங்களில் குறைந்தபட்சம் 3 ஆயிரம் கிலோ வரை விற்பனையாகிறது.இந்நிலையில், கடைகளில் சேகரமாகும் கழிவுகளை நகரில் உள்ள அருப்புக்கோட்டை-மதுரை சாலையில் இரவு நேரங்களில் கொட்டுகின்றனர். தினசரி கழிவுகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுகிறது.