சென்னை கோயம்பேட்டில் பொங்கல்பண்டிகை சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தை திறந்தார் அமைச்சர் விஜயபாஸ்கர்

சென்னை: சென்னை கோயம்பேட்டில் பொங்கல்பண்டிகை சிறப்பு பேருந்து முன்பதிவு மையத்தை அமைச்சர் விஜயபாஸ்கர் திறந்தார். பயணி ஒருவரிடம் பணத்தை பெற்று அதற்கான டிக்கெட்டை அவருக்கு எம்.ஆர்.விஜயபாஸ்கர் வாங்கிக் கொடுத்தார். பொங்கல் பண்டிகைக்காக வெளியூர் செல்ல சென்னையில் இருந்து ஜன.12,13,14ல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வழக்கமான பேருந்துகளுடன் தினமும் 4,950 சிறப்பு பேருந்துகள் என 3 நாளில் 16,075 பேருந்துகள் இயக்கப்படுகின்றனர். பொங்கலுக்கு பிற ஊர்களில் இருந்து 9,995 சிறப்பு பேருந்துகள் பல்வேறு இடங்களுக்கு இயக்கப்பட உள்ளன.

Related Stories: