ஐதராபாத்தில் இருந்து சென்னை திரும்பினார் ரஜினி

சென்னை: ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் திரைப்படம் இன்று திரைக்கு வர உள்ளதையொட்டி, ஐதராபாத்தில் இருந்து நேற்று காலை விமானம் மூலம் நடிகர் ரஜினிகாந்த் சென்னை வந்தார். ஐதராபாத்தில் நடந்து வரும் புதிய திரைப்பட ஷூட்டிங்கில் கலந்து கொள்வதற்காக நடிகர் ரஜினிகாந்த், கடந்த மாதம் 16ம் தேதி சென்றார். அங்கு தொடர்ச்சியாக படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்நிலையில், தர்பார் திரைப்படம் இன்று திரைக்கு வருகிறது. இதையொட்டி அவர், நேற்று பகல் 11.30 மணிக்கு ஐதராபாத்தில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார். அவரது பேட்டிக்காக தொலைக்காட்சி ஊடகங்கள், நிருபர்கள் காத்திருந்தனர். விமான நிலையத்தை விட்டு வெளியே வந்த ரஜினி, பேட்டி கொடுப்பது போல் வந்தார். ஆனால் பேட்டி எதுவும் கொடுக்காமல், ‘அனைவருக்கும் அட்வான்ஸ் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்’ என்று மட்டும் கூறிவிட்டு காரில் புறப்பட்டு சென்றுவிட்டார்.

Related Stories: