ராஜபாளையம்: விருதுநகர் மாவட்டம், ராஜபாளையத்தில் பொதுப்பணித்துறை அலுவலகம் மூலம், கண்மாய் பராமரிப்பு பணி ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் விடப்படுகிறது. இதன்படி, கூமாப்பட்டியைச் சேர்ந்த செல்லத்துரை என்பவருக்கு, வத்திராயிருப்பு பெரியகுளம் கண்மாயை பராமரிக்க ₹8 லட்சத்து 63 ஆயிரத்துக்கு டெண்டர் விடப்பட்டது. டெண்டரை எடுத்த செல்லத்துரை பணிகளை முடித்து 10 மாதமாகியும், இதற்கான பணத்தை வழங்க கமிஷன் கேட்டு அதிகாரிகள் இழுத்தடித்ததாக கூறப்படுகிறது.