தூத்துக்குடி: தூத்துக்குடி பகுதியில் கடந்த இரு நாட்களாக ஒரு டிக்-டாக் வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதில் தூத்துக்குடியை சேர்ந்த 2 ‘புள்ளிங்கோ’ வாலிபர்கள் போலீஸ் வேன் முகப்பில் ஏறி நின்று கொண்டு, சினிமா பஞ்ச் டயலாக்பேசி கழுத்தை அறுப்பதுபோல சைகையில் கூறி வீடியோவாக எடுத்துள்ளனர். இந்த வீடியோவை ‘‘டிக்-டாக்’’ செயலியில் பதிவேற்றம் செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி ஆயுதப்படைக்கு சொந்தமான ஆயுதப்படை வாகனம் தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி அருகே நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டிருந்தது. அதில் யாரும் இல்லாத நேரத்தில் 2 வாலிபர்கள் ஏறி டிக் - டாக்கிற்காக நடித்துள்ளனர். இதனை ஒருவர் வீடியோ எடுத்துள்ளார் என்பது தெரியவந்தது.