சேலம்: சேலத்தில் கந்துவட்டி கொடுமையால் கணவர் தற்கொலை செய்து கொண்டதால் வறுமையின் பிடியில் சிக்கிய பெண், 3 குழந்தைகளின் பசியை போக்க தலைமுடியை விற்பனை செய்து உணவு வழங்கினார். சேலம் பொன்னம்மாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செல்வம்(37). இவரது மனைவி பிரேமா(31). இவர்களுக்கு மூன்று மகன்கள். வீமனூர் பகுதியில் கடந்த 2015ல் செங்கல் சூளையில் பணியாற்றியபோது, உரிமையாளரிடம் செல்வம் கடன் வாங்கினார். இதேபோல் பல இடங்களிலும் 4.50 லட்சம் கடன் வாங்கிய செல்வம், திருப்பித்தர முடியாத நிலையில் மனமுடைந்து 7 மாதங்களுக்கு முன்பு தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். வீமனூரில் உள்ள செங்கல் செங்கல் சூளையில் பிரேமா கூலி வேலைக்கு சென்று வருகிறார். இதனிடையே, பணம் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.