மதுரை: மதுரை ஆதின வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலை கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருஞானசம்பந்தரால் தோற்றுவிக்கப்பட்ட மதுரை ஆதீனம் கிட்டத்தட்ட 1700 ஆண்டுகளுக்கு முற்பட்டது. மதுரை ஆதீனம் மீனாட்சியம்மன் கோவில் இருக்கின்ற முக்கியமான மடமாகும். இந்த வளாகத்தின் முன்பக்கத்தில் உள்ள தனியார் விடுதிக்கு மதுரை ஆதினம் ஏற்கனவே குத்தகைக்காக விடப்பட்டுள்ளன. கிட்டத்தட்ட 29 ஆண்டுகள் அந்த இடம் குத்தகைக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. இது பக்தர்களிடையே பல்வேறு அதிருப்தி ஏற்படுத்தியதை தொடர்ந்து, அவர்களை காலி செய்வதற்காக இது தொடர்பான வழக்குகள் மதுரை மாவட்ட நீதிமன்றங்களில் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 5ம் தேதி காலை சுமார் 7 மணியளவில் விடுதி உரிமையாளர் இளவரசன் என்பவர் 8 அடியாட்களுடன் வந்து தங்களுக்கு சாதகமாக நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்திருக்கிறது.