சென்னை: உயர் சிறப்பு அந்தஸ்து பெற்றப் பிறகு அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்ற கூடாது என தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர் கூட்டமைப்பு ஆளுநருக்கு கடிதம் எழுதியுள்ளது. உயர் சிறப்பு அந்தஸ்து கிடைக்க பெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தின் 4 வளாகங்களைச் சேர்த்து தனிப் பல்கலைக்கழகமாக மாற்றவும், மற்ற பொறியியல் கல்லூரிகளை நிர்வகிக்க தனிப் பல்கலைக்கழகத்தை உருவாக்கிடவும், தமிழக அரசு பரிசீலித்துவருகிறது. அவ்வாறு செய்யும் போது அண்ணா உயர் சிறப்பு மையம் என அதன் பெயரை மாற்ற உள்ளதாக தகவல் வெளியானது. அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.