சென்னை: தமிழகத்தில் ஓய்வூதியதாரர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டம் வரும் 2022 வரை நீட்டிக்க இருப்பதாகவும் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டமன்றத்தில் தெரிவித்தார். ஓய்வூதியதாரர்களுக்கான காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா? என சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர் க.அன்பழகன் கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம், அரசு ஓய்வூதியதாரர்களுக்கு காப்பீட்டு திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதாக கூறினார். தொடர்ந்து பேசிய ஓ. பன்னீர்செல்வம் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம், முதல் கட்டமாக கடந்த 2014ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டு 2018ம் ஆண்டு வரை செயல்படுத்தப்பட்டது. அப்போது அவர்களுக்கான மருத்துவ காப்பீடு ரூபாய் 2 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது.