சென்னை: புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பள்ளி மாணவர்களுக்கு சென்னை மாநகராட்சி சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், மரம் வளர்த்தவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது. சென்னை மாநகராட்சி தேனாம்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட சூளைமேடு நெடுஞ்சாலையில் உள்ள ஜெய்கோபால் கரோடியா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘புகையில்லா போகி’ குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதில் சென்னை மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், பசுமைப்படை ஒருங்கிணைப்பாளர் தங்கராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியை எழிலரசி மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.