பெரம்பூர்: சென்னை ஓட்டேரி ஜமாலியா சாந்தி காலனியை சேர்ந்தவர் சாகுல் அமீது (62). அதே பகுதியில் மரக்கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த வாரம் குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு சென்றுவிட்டு அங்கிருந்து இரு தினங்களுக்கு முன் சென்னைக்கு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 10 சவரன் நகை, பணம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து ஓட்டேரி குற்றப்பிரிவு போலீசில் சாகுல் அமீது புகார் செய்தார்.