துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் பொன்னியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் விஷ்ணு (18). வேளச்சேரியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், தனது நண்பரான சசிகுமார் உள்ளிட்ட 18 பேருடன் நேற்று முன்தினம் அக்கரை கடற்கரைக்கு சென்றார். அங்கு விஷ்ணு, சசிகுமார் ஆகியோர் கடலில் குளித்தனர். அப்போது எழுந்த ராட்சத அலையில் இருவரும் சிக்கி உயிருக்கு போராடினர்.