டெல்லி: அமெரிக்கா விமானப்படை நடத்திய தாக்குதலில் ஈரான் ராணுவத்தின் மூத்த அதிகாரி சுலைமானி கொல்லப்பட்டார். இதனால், அமெரிக்கா–ஈரான் இடையே மோதல் போக்கு அதிகரித்துள்ளது. பொறுமையை கடைப்பிடிக்குமாறு இந்தியா ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளது. தொடர்ந்து, அமெரிக்காவின் தாக்குதலில் ஈரானின் முக்கிய தளபதி கொல்லப்பட்டதை அடுத்து, மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள நிகழ்வுகள் மிக தீவிரமான திருப்பத்தை அடைந்துள்ளதாகவும், போர் பதற்றம் இந்தியாவுக்கு கவலை அளிப்பதாக உள்ளது என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, எண்ணெய் வளம் மிக்க வளைகுடா பகுதியில் பதற்றம் நீடிப்பது உலக பொருளாதாரத்தை பாதிக்கும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.