சென்னை: கடந்த 2019ம் ஆண்டில் 54 ஆயிரம் மரக்கிளைகள் அகற்றப்பட்டுள்ளதாக மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். மரக்கிளைகள் தொடர்பான புகார்களை தொலைபேசி மற்றும் இ-மெயில் வழியாக தெரிவிக்கலாம் என்றும் அறிவித்துள்ளார். சென்னை மாநகராட்சியில் பேருந்து சாலைகள் மற்றும் உட்புற சாலையோரங்களில் சுமார் 1 லட்சத்து 61 ஆயிரம் மரங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலான மரங்கள் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்துக்கு இடையூறாக காணப்படுகிறது. இந்த மரக்கிளைகளை மண்டலங்களில் பணிபுரியும் பூங்கா மேற்பார்வையாளர்கள் மற்றும் பணிப்பார்வையாளர்கள் அவ்வப்போது ஆய்வு செய்து அகற்றி வந்தனர்.