தி.நகரில் திருட்டு கும்பலிடம் இருந்து 82 செல்போன்கள் பறிமுதல்: சிசிடிவி மூலம் சிக்கினர்

சென்னை: சென்னையின் வர்த்தக கேந்திரமான தி.நகர் தினமும் வந்து செல்லும் மக்களால் எப்போதும் பிசியான பகுதியாகவே இருந்து வருகிறது. இதை பயன்படுத்தி சில  கூட்டம் தி.நகரில் முகாமிட்டு உயர்ரக செல்போன்களை  கொண்டு வரும் நபர்களை குறிவைத்து வழிப்பறி செய்து வந்தது. இது குறித்து அதிகளவு புகார்கள் வந்ததால் தனிப்படை போலீசார் கடந்த வாரம் சிசிடிவி பதிவு மூலம் வழிப்பறி கொள்ளையர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர்.  அவர்களிடம் இருந்து 82 செல்போன்கள் மீட்கப்பட்டன.  அதைதொடர்ந்து உரிமையாளர்களிடம் செல்போன் ஒப்படைக்கும் நிகழ்ச்சி தி.நகர் துணை கமிஷனர் அசோக்குமார் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மீட்கப்பட்ட செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Related Stories: