பென்னாகரம்: தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு தமிழகம் மட்டுமின்றி கர்நாடகா, கேரளா, ஆந்திரா மற்றும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை இன்றுடன் நிறைவு பெறும் நிலையில் இன்று காலை முதலேயே தர்மபுரி மற்றும் உள்ளுர் பகுதிகள் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் கார், வேன்களில் சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.