ஓசூர்: ஓசூரில் அட்டகாசம் செய்து வந்த 60 யானைகள் தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டியடிக்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சானமாவு வனப்பகுதியில் 60க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டு இருந்தன. இதில் 9 யானைகள் நேற்று பிரிந்து நாயன்கொட்டாய் அக்ரஹாரம், தாதாபுரம், தொரப்பள்ளி, குடிசாதனபள்ளி ஆகிய பகுதிகளில் புகுந்து அங்கு பயிரிட்ட ராகி மற்றும் நெற்பயிர்களை நாசப்படுத்தி சென்றன. மேலும், அதிகாலை 9 யானைகளில் 8 யானைகள் போடூர்பள்ளத்திற்கு சென்றது. ஒரு யானை மட்டும் 7 மணி வரை தனியாக சுற்றித்திரிந்தது. அப்போது அங்கு விறகு எடுக்க வந்த வெங்கடலட்சுமி என்ற மூதாட்டியை ஒற்றை யானை மிதித்து கொன்றது.