பாட்னா: பீகாரில் என்.பி.ஆர் பணிகள் மே 15 ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அம்மாநில துணை முதல்-அமைச்சர் சுஷில் குமார் மோடி தெரிவித்தார். இது தொடர்பாக சுஷில் குமார் மோடி கூறுகையில், “ 2020-ம் ஆண்டு தேசிய மக்கள்தொகை பதிவேட்டுக்கான பணிகள் ஏப்ரல் முதல் தேதி முதல் செப்டம்பர் 30-ம் தேதிவரை நடக்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. அதன்படி பீகார் மாநிலத்தில் மே 15-ம் தேதி தொடங்கி, மே 28-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவித்தார்.