சென்னை: மாரத்தான் போட்டியை முன்னிட்டு இன்று அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் மதியம் 12 மணி வரை மாரத்தான் ஓட்டத்தில் பங்கேற்பாளர்களுக்கு இலவச பார்க்கிங் சேவையை நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து, மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்ட அறிக்கை: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை ரன்னர்ஸ் உடன் இணைந்து இன்று சென்னை மாரத்தான் ஏற்பாடு செய்துள்ளது. சென்னை மாரத்தானில் பங்கேற்கும் நபர்களை ஊக்குவிக்கும் விதமாக காலை 6 மணிக்கு பதில் அதிகாலை 3 மணி முதலே மெட்ரோ ரயில் சேவை இயங்கும். இதேபோல், அதிகாலை 3 மணி முதல் மதியம் 12 மணி வரை அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் வாகன நிறுத்துமிடங்களை பங்கேற்பாளர்களுக்கு மட்டும் இலவசமாக வழங்குகிறது.