செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அடுத்த புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பூசை. இவர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைந்தார். இதனால் வேதனையடைந்த பூசை நேற்று மதியம் கிராமத்தில் உள்ள கடைத்தெருவில் நின்று ரகளையில் ஈடுபட்டார். அப்போது அவர், ‘என்னிடம் பணம் வாங்கிக் கொண்டு, வேறு நபருக்கு வாக்களித்தவர்கள் பணத்தை திருப்பி தாருங்கள்’ எனக்கூறி கிராம மக்களை பார்த்து மிரட்டல் விட்டதுடன், பீர்பாட்டில், செங்கல்லை எடுத்து வீசியுள்ளார்.