சென்னை: சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு தரப்பில் ஆஜராக 48 புதிய அரசு வக்கீல்களை நியமனம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் அரசு சார்பில் ஆஜராக அட்வகேட் ஜெனரல், 11 கூடுதல் அட்வகேட் ஜெனரல்கள், அரசு பிளீடர், சிறப்பு அரசு பிளீடர்கள், கூடுதல் அரசு பிளீடர்கள், அரசு வக்கீல்கள் ஏற்கனவே நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், வழக்கின் பெருக்கத்தை கருத்தில் கொண்டு மேலும் அரசு வக்கீல்களை நியமிக்க அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் அரசுக்கு பரிந்துரை செய்தார்.