மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடலுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் அஞ்சலி

சென்னை: மறைந்த முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். துரைமுருகன், தயாநிதிமாறன் எம்.பி, பொன்முடி உள்ளிட்ட திமுக நிர்வாகிகளும் பி.எச்.பாண்டியன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

தமிழக முன்னாள் சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன்(75) காலமானார். உடல் நலக்குறைவால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது சிகிச்சை பலனின்றி பி.ஹெச்.பாண்டியனின் உயிர் பிரிந்தது. 75 வயதான பி.ஹெச்.பாண்டியன் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் பிறந்தார். இவர் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்த போது சட்டப்பேரவை சபாநாயகராக பணியாற்றியுள்ளார். 1980-ம் ஆண்டு துணை சபாநாயகராகவும், 1984-ம் ஆண்டு சபாநாயகராகவும் பி.ஹெச்.பாண்டியன் பணியாற்றினார். மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார். 1977, 1980, 1984 ஆகிய ஆண்டுகளில் அதிமுக சார்பில் சட்டமன்ற உறுப்பினராக பி.ஹெச்.பாண்டியன் தேர்வானவர்.

Related Stories: