பெரம்பலூர் அருகே தேர்தலில் வெற்றி பெற்ற ஊராட்சி தலைவர் மரணம்

பாடாலூர்,ஜன.4: பெரம்பலூர் அருகே தேர்தலில் வெற்றி பெற்ற ஆதனூர் ஊராட்சி மன்றத் தலைவர் மணிவேல் இறந்தார். பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஆதனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிவேல் (72). திமுகவை சேர்ந்த இவர், தற்போது நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ஆதனூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்டார். மணிவேலுக்கு ஆஸ்துமா இருந்த நிலையில், தேர்தலுக்காக இரவு பகலாக வேலை செய்து வந்தார். இதனால் அவரது உடல்நலம் பாதிக்கப்பட்டது.

நேற்றுமுன்தினம் இரவு மணிவேல் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட சிறிதுநேரத்தில் அவர் அதற்கான சான்றிதழை பெற்றுக்கொண்டு வீட்டுக்கு சென்றார். ஆனால், நள்ளிரவில் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.  உடனடியாக அவரை அரியலூர் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை இறந்தார். மணிவேலுக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

Related Stories: