சென்னை: டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: டாஸ்மாக் நிறுவனத்தில் சில்லறை விற்பனை கடை பணியாளர்களாக பணிபுரிந்தவர்கள் சிறப்பு தேர்வு மூலம் இளநிலை உதவியாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
தேர்வு செய்யப்பட்ட இளநிலை உதவியாளர்களுக்கு பணிநியமன ஆணையை 6ம் தேதி காலை வழங்கிட அறிவுறுத்தப்படுகிறது. மேலும், பணி நியமன ஆணை வழங்கும்போது, நியமனம் செய்யப்பட்டுள்ள நபர்களை ஏற்கனவே அவர்கள் பணிபுரிந்துவரும் கடைப்பணியிலிருந்து 6ம் தேதி முற்பகல் விடுவிப்பு செய்து ஆணை வழங்கப்பட வேண்டும். பணிநியமனம் செய்யப்பட்டுள்ள இளநிலை உதவியாளர், பணியிடத்தில் உடனடியாக பணியேற்க வேண்டும் என்ற விவரம் விடுவிப்பு உத்தரவில் இடம்பெற்றிருக்க வேண்டும்.