சென்னை: குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து போராட்டம் நடத்திய போது, பிரதமர் மோடி, அமித்ஷா, முதல்வர் படங்களை செருப்பால் அடித்தும், தீவைத்து கொளுத்தியதாக, தமுமுக பிரமுகர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். குடியுரிமை சட்ட திருத்தத்தை கண்டித்து கடந்த டிசம்பர் 18ம் தேதி மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் பட்டினப்பாக்கம் பேருந்து நிலையம் அருகே போராட்டம் நடந்தது. அப்போது. சிலர் பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் உருவப்படங்களை செருப்பால் அடித்தும், தீவைத்தும் கொளுத்தியும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.