சென்னை: பராமரிப்பு பணி காரணமாக காட்டாங்கொளத்தூர் - கூடுவாஞ்சேரி இடையே மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே வரும் 7, 10, 11, 14, 17 ஆகிய தேதிகளில் காலை 10.08, 10.56 மணிக்கு இயக்கப்படும் ரயில் கூடுவாஞ்சேரி - செங்கல்பட்டு இடையேயும், சென்னை கடற்கரை - செங்கல்பட்டு இடையே 11.48 மணிக்கு இயக்கப்படும் ரயில் தாம்பரம் - செங்கல்பட்டு இடையேயும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே காலை 11.30 மணிக்கு இயக்கப்படும் ரயில் செங்கல்பட்டு - கூடுவாஞ்சேரி இடையேயும், திருமால்பூர் - சென்னை கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் ரயில் திருமால்பூர் - கூடுவாஞ்சேரி இடையேயும், செங்கல்பட்டு - சென்னை கடற்கரை இடையே பிற்பகல் 12.20 மணிக்கு இயக்கப்படும் ரயில் செங்கல்பட்டு - தாம்பரம் இடையேயும் ரத்து செய்யப்படுகிறது.