வாலிபர்கள் தற்கொலை முயற்சி

சென்னை: சென்னை பல்லவன் சாலையில் உள்ள எஸ்.எம்.நகரில் கூவம் ஆற்றங்கரையில் கட்டப்பட்ட வீடுகளை மாநகராட்சி அகற்ற முடிவு செய்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பல்லவன் இல்லம் காந்தி நகரை ேசர்ந்த பாலு (28), மணிகண்டன் (29) ஆகிய இருவர் ேநற்று மாலை வீடுகளை அகற்ற கூடாது என்று கூறி கூவம் ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்றனர். அக்கம் பக்கத்தினர் கூவத்தில் குதித்து அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். உரிய நேரத்தில் மீட்கப்பட்டதால் இருவரும் உயிர்தப்பினர். தற்போது இருவரும் உள்நோயாளிகளாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: