பாபநாசம் : திருக்கருக்காவூரில் கர்ப்பரட்சாம்பிகை கோயிலுக்கு செல்லும் சாலை விரைந்து சீரமைக்கப்படுமா என்று பொதுமக்கள் எதிர்பார்த்துள்ளனர். பாபநாசம்- சாலியமங்கலம் சாலையில் பாபநாசத்தில் இருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் திருக்கருக்காவூர் உள்ளது. இந்த ஊரிலுள்ள கர்ப்பரட்சாம்பிகை கோயில்பிள்ளை வரம் அருளும் ஆலயம் என்பதால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மட்டுமல்லாது டெல்லி, மும்பை உள்ளிட்ட வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து கூட பக்தர்கள் வந்து செல்கின்றனர்.