பாக்தாக்: ஈராக் தலைநகர் பாக்தாக் விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் ஈரான் ராணுவ தளபதி காசிம் சோலிமானி உயிரிழந்துள்ளார். ஹஷீத் கிளர்ச்சியாளர்கள் குழுவின் துணைத் தலைவர் மஹாதி உள்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர். ஹஷீத் கிளர்ச்சியாளர்கள் குழுவின் அபு மஹாதி ஈரான் ஆதரவுடன் இயங்கியதாக ஈராக் ராணுவம் தெரிவித்துள்ளது. ஈரான் மற்றும் ஈராக் இடையே தற்போது மிகப்பெரிய அளவில் பிரச்சனை நிகழ்ந்து வருகிறது. ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் பல தற்போது அங்கு பாக்தத்தில் போர் செய்ய தயார் ஆகி வருகிறது. ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் ஏற்கனவே அங்கிருக்கும் அமெரிக்க தூதரகத்தை கைப்பற்றி உள்ளது. இதனால் அமெரிக்க தூதரகம் அருகே பெரிய அளவில் அமெரிக்க ராணுவ படைகள் குவிக்கப்பட்டுள்ளது.
பாக்தாக் விமான நிலையத்தில் அமெரிக்கா ஏவுகணை தாக்குதல்; ஈரான் ராணுவ தளபதி காசிம் சோலிமானி கொலை
- எங்களுக்கு
- காசிம் சோலிமானி
- கொலை
- பாக்தாத் விமான நிலையம்
- ஈரானிய
- தளபதி
- ஈராக்
- அமெரிக்க இராணுவம்
- ஈரான் இராணுவம்