திருவொற்றியூர்: திருவொற்றியூர், கலைஞர் நகரில் பிரசித்தி பெற்ற பஞ்சமுக நாகத்தம்மன் கோயில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு, வழக்கம் போல், பூஜை முடிந்து, நடை சாத்தப்பட்டது. நேற்று காலை அர்ச்சகர் தயாள் வழக்கம்போல் கோயிலை திறக்க வந்தார். அப்போது கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியல் உடைக்கப்பட்டு, காணிக்கை பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரிய வந்தது. பின்னர் இதுகுறித்து சாத்தாங்காடு போலீசில் புகார் செய்யப்பட்டது.