மீஞ்சூர் வாக்கு எண்ணும் மையத்தில் மதிய உணவு வழங்கப்படவில்லை என ஊழியர்கள் வெளிநடப்பு

திருவள்ளூர்: மீஞ்சூர் ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் மதிய உணவு வழங்கப்படவில்லை எனக்கூறி ஊழியர்கள் வெளிநடப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் 315 மையங்களில் இன்று எண்ணப்பட்டு வருகின்றன. வாக்குப்பதிவு மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையங்களில், அதிகாரிகள், முகவர்கள், மொபைல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: