சென்னை: ஹலோ எப்.எம் (Hello FM) என்பது தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஒலிபரப்படும் பண்பலை வானொலி நிலையம் ஆகும். இது சென்னையைச் சேர்ந்த மலர் பதிப்பகம் நிறுவனத்தால் நடத்தப்படுகிறது. அதிர்வெண் பட்டை 106.4 MHz ஐ பயன்படுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.2006-ம் ஆண்டு முதல் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் இருந்து நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகிறது. 2007-ம் ஆண்டில் புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் மற்ற நகரங்களான மதுரை, திருச்சி, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடியிலும் இதன் சேவையை விரிவுப்படுத்தியது. தற்போது, சேலம், ஈரோடு, வேலூர் மற்றும் துபாயிலும் ஹலோ எப்.எம் ஒலிபரப்படுகிறது.