கோயம்பேட்டில் பரபரப்பு நடிகை ஸ்ரீரெட்டியின் காரை உடைத்து சேதம்: மேலாளரிடம் விசாரணை

சென்னை: கோயம்பேட்டில் பிரபல நடிகையின் காரை உடைத்து சேதப்படுத்தியதாக சின்னத்திரை தயாரிப்பு மேலாளரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். சென்னை கோயம்பேடு, அன்பு நகரில் வசிப்பவர் பிரபல திரைப்பட நடிகை ரெட்டி. இவருக்கு சொந்தமாக விலை உயர்ந்த ஆடம்பர சொகுசு கார் உள்ளது. 2 நாட்களுக்கு முன் வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த இவரது காரின் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து கோயம்பேடு போலீசில் நடிகை ஸ்ரீரெட்டி புகார் அளித்தார். இப்புகாரில், தனது காரை சின்னத்திரை வட்டாரத்தில் தயாரிப்பு மேலாளராக இருக்கும் மனோஜ் என்பவர் சேதப்படுத்தியதாக குறிப்பிட்டு இருந்தார். இப்புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சின்னத்திரை தயாரிப்பு மேலாளர் மனோஜை பிடித்து விசாரித்தனர்.

ஸ்ரீரெட்டியிடம் நடைபெற்ற விசாரணையில், தனது வீட்டின் முன் நின்றிருந்த காரை மேலாளர் மனோஜ் வேண்டுமென்றே அடித்து நொறுக்கியிருக்கலாம். அதற்கான சிசிடிவி காமிரா ஆதாரங்கள் என்னிடம் உள்ளன என ஸ்ரீரெட்டி கூறியதாக தெரிகிறது. ஆனால், அதற்கான ஆதாரங்களை அவர் இதுவரை தங்களிடம் ஒப்படைக்கவில்லை என போலீசார் கூறுகின்றனர்.

Related Stories: