சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் மணிக்கணக்கில் சம்பளம் அடிப்படையில் தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்ய கூடுதல் பதிவாளர் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். இதற்கு தடை கோரி ஜி.அருட்பெரும்ஜோதி என்பவர் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். “ஏற்கனவே 518 தற்காலிக ஆசிரியர்கள், கவுரவ ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இவர்கள் பணியாற்றி வருகிறார்கள். அண்ணா பல்கலைக்கழகத்தின் உறுப்பு கல்லூரிகளில் எத்தனை ஆசிரியர்கள் பணியிடங்கள் காலியாக உள்ளன, எத்தனை பணியிடங்கள் தேவை ஆகியவற்றை கண்டறியாமல் புதிதாக தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது உச்ச நீதிமன்ற மற்றும் உயர் நீதிமன்ற உத்தரவுகளுக்கும், பல்கலைக்கழக மானியக் குழுவின் விதிகளுக்கும் முரணானது. பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிரந்தர உதவி பேராசிரியர்களை நியமிக்காமல் தொடர்ந்து இதுபோன்று கவுரவ, தற்காலிக ஆசிரியர்களை அவர்கள் பணி செய்யும் நேரத்திற்கு ஏற்ப சம்பளம் என்ற அடிப்படையில் நியமனம் செய்வதும் விதிமுறைகளுக்கு முரணானது.