தண்டையார்பேட்டை: புத்தாண்டை முன்னிட்டு வண்ணாரப்பேட்டையில் நடைபெற்றது. இதில் சாலையோரம் நின்றிருந்த கார் மீது பைக் மோதியதில் 3 பேர் படுகாயம் அடைந்தனர். கார் பலத்த சேதமடைந்தது. புத்தாண்டை முன்னிட்டு வடசென்னையில் பைக் ரேஸ் நடைபெறுவதை தடுக்கும் வகையில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். ஆனால் ஒருசில இடங்களில் பைக் ரேஸ் நடைபெறுவதை தடுக்க பாதுகாப்பு சோதனை குறைவாக இருந்ததாகவும், சாலையில் தீப்பொறி பறக்க பைக்குகள் பறந்ததாகவும் கூறப்படுகிறது.இந்நிலையில் வண்ணாரப்பேட்டை, ஜமால் தெருவை சேர்ந்த இம்ரான் (24) என்பவர், தனது காரில் ஐ.டி ஊழியர்களை இறக்கிவிட்டு, திருவொற்றியூர் வழியாக வீடு திரும்பினார். அப்போது அங்கு ரேஸில் அதிவேகமாக வந்த ஒரு பைக் திடீரென இம்ரான் கார் மீது மோதியது. இதில் கார் பலத்த சேதமடைந்தது.